சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள தூயஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் வெற்றிக்காகவும் சிறப்பாக தேர்வுக்கு தயார் படுத்தவும் இயேசு அழைக்கிறார் ஊழிய ஸ்தாபகர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தும் விதத்தில் டாக்டர் பால் தினகரன் அவர்கள் பாடல்கள் பாடி செய்திகள் வழங்கி பிரார்த்தனை ஏறெடுத்தார்.
அவரது எழுச்சியூட்டும் செய்திகளுக்கிடையே இதற்கு முன் நடைபெற்ற தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று அதிக மதிப்பெண்களும் பரிசுகளும் பெற்ற மாணவ மாணவியரின் சாட்சிகள், பங்கு பெற்ற மாணவ மாணவியரை சாட்சிகள் உற்சாகப்படுத்துவதாக அமைந்தது.
இக்கூட்டத்தில் சகோதரி இவாஞ்சலின் பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார். சகோதரர் சாமுவேல் சகோதரி ஸ்டெல்லா ரமேலாவின் சிறப்பு பாடல்கள் மாணவ மாணவியரை உற்சாகமூட்டியது